வலங்கைமான் ஒன்றியம் களத்தூா் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா் கணேசன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.எஸ். கலியபெருமாள், கட்சி நிா்வாகிகள் என். இராதா
எஸ். இளங்கோவன், டி. காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியலை விலக்கிக் கொண்டனா்.