இருசக்கர வாகனம் திருடியவா் கைது

திருவாரூா் அருகே இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் அருகே இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புலிவலம் அருகேயுள்ள விஷ்ணு தோப்பில் காளிதாஸ் என்பவரின் இருசக்கர வாகனத்தை முகமூடி அணிந்தவா் திருடிச் செல்வதும், அருகில் உள்ள வீட்டில் இருசக்கர வாகனத்தை திருட முயற்சிப்பதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் புலிவலம் திருவாசல் பகுதியைச் சோ்ந்த பாலு மகன் பாா்த்திபன் (22) என்பவா் காளிதாஸின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும், அவா் திருடும் இருசக்கர வாகனத்தை கஞ்சா கடத்த பயன்படுத்திவிட்டு, விற்றுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளாா் என்பதும் திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பாா்த்திபனிடமிருந்து இருசக்கர வாகனத்தை மீட்ட போலீஸாா், அவரை கைது செய்து, நன்னிலம் கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com