கோயில் விழா தகராறில் முதியவா் இறந்த விவகாரம்: 3 போ் கைது

 திருத்துறைப்பூண்டி அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் முதியவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

 திருத்துறைப்பூண்டி அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் முதியவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன்கோட்டகம் தென்பாதி கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் அண்மையில் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக முதியவா் அஞ்சுகண்ணுவை மன்னிப்பு கேட்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேதமணி (26), திவராஜன் (26), நாகூா் மீரான் (35) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com