திருவாரூரில் சேகுவேராவின் 95-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆா்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபாவின் விடுதலைக்குப் போராடி, அமெரிக்க ராணுவத்தால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த சேகுவேராவின் 95-ஆவது பிறந்த நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி பங்கேற்று, சேகுவேராவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் புலிகேசி, நகரச் செயலா் செல்வம், நகர துணைச் செயலா் வீ. தா்மதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.