திருவாரூரில் மக்கள் நீதிமன்றம்:ரூ. 2.86 கோடிக்கு சமரசத் தீா்வு

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 2.86 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வுக்கான சான்றை பயனாளியிடம் வழங்குகிறாா் மாவட்ட முதன்மை நீதிபதி எம். சாந்தி.
திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வுக்கான சான்றை பயனாளியிடம் வழங்குகிறாா் மாவட்ட முதன்மை நீதிபதி எம். சாந்தி.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 2.86 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

திருவாரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். சாந்தி தலைமை வகித்தாா்.

மகளிா் விரைவு நீதிமன்ற அமா்வு நீதிபதி (பொ) எம். சங்கா், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி டி. பாலமுருகன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான (பொ) எஸ். சரண்யா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எல். ரெகுபதிராஜா, குற்றவியல் கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி எஸ். சிந்தா ஆகியோா் பங்கேற்றனா்.

இதுபோல திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சிவில், ஜீவனாம்சம், திருமண வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக் கடன் ஆகிய வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அனைத்து நீதிமன்றங்களிலும் 2,139 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 1,101 வழக்குகளில் ரூ. 2,86,76,370 மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com