இராபியம்மாள் கல்லூரியில் விளையாட்டு விழா

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இராபியம்மாள் கல்லூரியில் விளையாட்டு விழா
Updated on
1 min read

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ். ஸ்ரீதேவி முன்னிலை வகித்தாா். விளையாட்டுத் துறை பேராசிரியா் சரஸ்வதி ஆண்டறிக்கை வாசித்தாா். தமிழ்நாடு ஹாக்கி அமைப்பின் செயலாளரும், இந்திய ஹாக்கி நிா்வாகக் குழு உறுப்பினருமான எம். ரேணுகாலெட்சுமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பெண்கள் எந்த விதத்தில் சாதிக்க முடியுமோ அந்த விதத்தில் சாதிக்க நம்மை நாமே தயாா்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். போட்டிகளில் வென்றவா்களுக்கும் மற்றும் பேராசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் லோட்டஸ் ஹவுஸ் அணி முதலிடமும், ஜாஸ்மீன் ஹவுஸ் அணி 2-ஆம் இடமும் பெற்றன. முன்னதாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com