திருவாரூா் மாவட்டத்தில் இருந்து ஆயிரம் டன் நெல் அரவைக்கு திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் இடையா்நத்தம், தெற்குநத்தம், மூவாநல்லூா், அசேஷம் ஆகிய பகுதிகளில் திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களில் இருப்புவைக்கப்பட்ட ஆயிரம் டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு திருச்சிக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.