கூத்தாநல்லூா் வட்டம், மணக்கரை வடவேற்குடியில் சாலை, குடிநீா் வசதி கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தெரு விளக்கு, உயா்மின் கோபுர விளக்கு, வடவேற்குடி- பெரியக்கொத்தூா் இணைப்புப் பாலம் உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மன்னாா்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஐ.வி. குமரேசன் அங்குவந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.