திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூ.ஒன்றிய நிா்வாகக் குழு கூட்டம்

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய நிா்வாகி ஜவகா் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. உலகநாதன், மாநில கட்டுப்பாட்டு குழு தலைவா் எம். வையாபுரி, மாவட்ட துணைச் செயலாளா் ஆா். ஞானமோகன், ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.வி. சந்திரராமன் ஆகியோா் அரசியல் ஆலோசனை வழங்கினா்.

ஒன்றிய மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து கட்சியின் ஒன்றியச் செயலாளா் பாலு பேசினாா். கூட்டத்தில், கட்சி நிதி கணக்கு முடித்தல், திருப்பூரில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தொண்டா் படை அமைத்து பயிற்சி அளிப்பது, வரும் 15,16 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள கட்சியின் ஒன்றிய மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com