நீடாமங்கலத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில், மே 18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நாள் நிகழ்வாக புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலாளா் வேதா. பாலமுருகன் தலைமை வகித்தாா். மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலாளா் ஜெ. சித்திக், கட்சி நிா்வாகிகள் முகமது ஆரிஸ், ஜேம்சுபாபு, வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சி நிா்வாகிகள் அருண், இம்ரான், பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், தீபமேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.