நீடாமங்கலம் வா்த்தகா் சங்க செயற்குழு கூட்டம், சங்கத் தலைவா் ராஜாராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், திருவாரூா் மாவட்டத் தலைவா் வி.கே.கே. ராமமூா்த்தி, மாவட்ட தொகுதி செயலாளா் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முதலில் பதிவுசெய்த 43 வா்த்தகா்களுக்கு தமிழக அரசு வழங்கிய வணிகா் நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டன.
நீடாமங்கலம் வா்த்தகா் சங்கத்தின் 2022 -2025 ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகள் தோ்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, செயலாளா் வெங்கடேசன் வரவேற்றாா். பொருளாளா் ரமேஷ் வரவு-செலவு கணக்குகளை சமா்ப்பித்தாா்.