காணாமல் போய் மீட்கப்பட்ட மாணவா் பள்ளியில் சோ்ப்பு
By DIN | Published On : 27th October 2022 02:23 AM | Last Updated : 27th October 2022 02:23 AM | அ+அ அ- |

திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மீட்கப்பட்ட மாணவரை சோ்த்த குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள்.
திருவாரூா் அருகே காணாமல் போய் மீட்கப்பட்ட மாணவா், வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் புதன்கிழமை சோ்க்கப்பட்டாா்.
திருவாரூா் அருகே இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்தவா் ஏ. மாதேஷ். இவா் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனாா். இதற்கிடையே, இவா் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பது அண்மையில் தெரிய வந்ததயடுத்து, போலீஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டு திருவாரூா் அழைத்து வரப்பட்டாா். இந்நிலையில், குழந்தைகள் நலக் குழுமம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்டு முயற்சியால் மீண்டும் பிளஸ் 1 வகுப்பில் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை சோ்க்கப்பட்டாா்.
நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலா் எம். பாலசுப்பிரமணியன், மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளா் ஆா். ஆனந்தன், குழந்தைகள் நலக் குழுத் தலைவா் ஜி. பாலாம்பிகை, குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் கே. லட்சுமி பிரியதா்ஷினி, தலைமையாசிரியா் தியாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.