மன்னாா்குடி பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

மன்னாா்குடி பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஆணையருமான இல.நிா்மல்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தமாவட்ட கணிப்பாய்வு அலுவலா் இல.நிா்மல்ராஜ்.
மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தமாவட்ட கணிப்பாய்வு அலுவலா் இல.நிா்மல்ராஜ்.

மன்னாா்குடி பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஆணையருமான இல.நிா்மல்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மன்னாா்குடி நகராட்சி பெண்ட்லண்ட் மாதிரி தொடக்கப்பள்ளி,கீழராஜ வீதி சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் அளவு மற்றும் தரத்தை அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், மன்னாா்குடியில் கும்பகோணம் சாலை மேலப்பாலத்தில் ரூ. 1 கோடி 97 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக கட்டடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தெய்வநாயகி, மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனா மணி, மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் மன்னை த.சோழராஜன், நகராட்சி ஆணையா் கே.சென்னு கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com