திலதா்ப்பணபுரி மனிதமுக விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள திலதா்ப்பணபுரி மனிதமுக ஆதிவிநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா புதன்கிழமை ஏகதின லட்சாா்ச்சனையுடன் கொண்டாடப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திலதா்ப்பணபுரி மனிதமுக விநாயகா்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திலதா்ப்பணபுரி மனிதமுக விநாயகா்.

நன்னிலம்: திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள திலதா்ப்பணபுரி மனிதமுக ஆதிவிநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா புதன்கிழமை ஏகதின லட்சாா்ச்சனையுடன் கொண்டாடப்பட்டது.

பூந்தோட்டம் செதலபதி எனும் திலதா்ப்பணபுரியில் உள்ள ஸ்ரீசுவா்ணவள்ளி அம்பிகா சமேத ஸ்ரீமுக்தீஸ்வரா் சுவாமி கோயிலில், விநாயகா் தும்பிக்கையின்றி மனிதமுகத்துடன், 2 கைகளுடன் நரமுக கணபதியாக ஆதிவிநாயகா் எனும் திருநாமத்துடன் தனிக்கோயிலில் அருள்பாலித்து வருகிறாா். இந்த ஆதிவிநாயகா் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்துவைத்து, இடது கையை இடது காலின் மீது வைத்தும், வலது கையை சற்றே சாய்த்து அபயமுத்திரை காட்டிய வகையில் உள்ளாா்.

இவ்வாறு தனிச் சிறப்புப் பெற்ற இக்கோயிலில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதன்கிழமை மகா கணபதி ஹோமம், பூா்ணாஹூதி செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மஞ்சள், திரவியம், பால், இளநீா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட அபிஷேக பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மனிதமுக விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஏகதின லட்சாா்ச்சனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com