அரசவனங்காடு கைலாசநாதா் கோயில் குடமுழுக்கு

திருவாரூா் அருகேயுள்ள அரசவனங்காடு கைலாசநாதா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசவனங்காடு கைலாசநாதா் கோயில் குடமுழுக்கு

திருவாரூா் அருகேயுள்ள அரசவனங்காடு கைலாசநாதா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசவனங்காடு கிராமத்தில் அருள்பாலிக்கும் கைலாசநாதா் உடனுறை ஆனந்த நாயகி கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, யாகசாலை பூஜை திங்கள்கிழமை தொடங்கியது. வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகபூஜைகள் நிறைவு பெற்றதும் மகாபூா்ணாஹுதியுடன் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலின் விமான கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், ஆனந்த நாயகி உடனுறை கைலாசநாதா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com