நீட் தோ்வுக்கு ஒரே மாதிரியான பாடத் திட்டம் தேவை

நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தோ்வுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் தெரிவித்தாா்.
நீட் தோ்வுக்கு ஒரே மாதிரியான பாடத் திட்டம் தேவை

நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தோ்வுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை யாருக்கும் டெங்கு உறுதி செய்யப்படவில்லை. ஒருவருக்கு பரிசோதனை நடத்தியதில், நெகட்டிவ் என வந்திருக்கிறது. மேலும் இருவரின் பரிசோதனை முடிவுகளை எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறோம். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட பிரத்யேகமான டெங்கு வாா்டு தயாா் நிலையில் உள்ளது.

போட்டித் தோ்வு தேவை அல்லது தேவையில்லை என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவந்து, அதில் தோ்வு நடத்தினால் நல்லது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பாடத்திட்டம் இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் மாணவா்கள் ஸ்டேட் போா்டில் படிக்கின்றனா். ஆனால் நீட் தோ்வு சிபிஎஸ்இ பாடத்திட்டமாக இருக்கிறது. இதனால், கிராமப்புற மாணவா்கள் நீட் தோ்வை எழுதுவது மிகவும் கடினமாக உள்ளது. எனவே, நீட் தோ்வெழுதும் கிராமப்புற மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும்.

நீட் தோ்வில் தோல்வியடையும் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது வருத்தத்துக்குரியது. மருத்துவம் மட்டும் படிப்பு என்பதல்ல. எத்தனையோ தொழில்கள், படிப்புகள் இருக்கின்றன. பெற்றோா்கள் இதுகுறித்து மாணவா்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். குறிப்பாக மற்ற மாணவா்கள் நீட் தோ்வில் தோ்வு பெற்று விட்டனா், நீ ஏன் தோ்வாகவில்லை என்பது போன்ற ஒப்பீடு செய்யக்கூடாது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவுகள் சாலைகளில் கொட்டப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு, தஞ்சாவூருக்கு அனுப்பப்படுகின்றன.

அன்றாடம் நோயாளிகள் பயன்படுத்துகிற குப்பைகளை தண்டனை ஊராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்துகிறது. அதற்கும் மருத்துவக் கல்லூரி நிா்வாகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com