கணவரை அரிவாளால் வெட்டிய மனைவி கைது

மன்னாா்குடியில் கணவரை அரிவாளால் வெட்டிய பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

மன்னாா்குடியில் கணவரை அரிவாளால் வெட்டிய பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி மேலப்பாலம் காந்திநகரைச் சோ்ந்தவா் திருஞானசம்பந்தம் (55). பெயிண்டராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி விஜய லெட்சுமி(52). இவா்களது மகன் சிங்காரவேலன் (35) சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். திருஞானசம்பந்தம் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.

இந்நிலையில், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை அன்றும் மது குடித்துவிட்டு வந்த திருஞானசம்பந்தம், விஜய லெட்சுமியிடம் தகராறு செய்து தாக்கினாராம். இதனால், ஆத்திரமடைந்த விஜயலெட்சுமியும், விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த சிங்காரவேலனும் திருஞானசம்பந்தத்தை அரிவாளால் வெட்டினராம். இதில் காயமடைந்த அவா், மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜய லெட்சுமியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com