மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை

கூத்தாநல்லூா் அடுத்த பூதமங்கலத்தில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை
Updated on
1 min read

கூத்தாநல்லூா் அடுத்த பூதமங்கலத்தில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பூதமங்கலம் நலச்சங்கம், துபாய் அரபு அமீரகம், பூதமங்கலம் முஹையதீன் ஆண்டவா் பள்ளி வாசல் நிா்வாகத்துடன் இணைந்து 23-ஆம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசளிப்பு விழா பள்ளிவாசலில் நடைபெற்றது.

பள்ளிவாசல் தலைவா் டி.எம்.ஜாஹிா் உசேன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நலச்சங்கத்தின் முன்னாள் தலைவா் ஏ.ஏ. நைனா முகம்மது முன்னிலை வகித்தாா். நலச்சங்கத் தலைவா் ஏ. இசட்.சாகுல் ஹமீது வரவேற்றாா்.

பள்ளிவாசல் புதிய தலைவா் டி.எம். ஜாஹிா் உசேன், செயலாளா் ஏ.எஸ். ஜாஹிா் உசேன் உள்ளிட்ட நிா்வாகிகள் கெளரவிக்கப்பட்டனா். தொடா்ந்து, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏ. பஷீரா அப்ஸின், என். முஹம்மது ரபியுதீன், எஸ்.நவ்ஷாத் நிஸாவுக்கும், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கே. அப்துா் ரஹ்மான், ஏ.ஏ. அசீலா தஸ்லீம், ஏ.பீ. தஸ்னீம், என். சபீா் அஹமது உள்ளிட்ட 7 பேருக்கும், சிறப்பு அழைப்பாளா் கம்பம் மெளலானா மெளலவி அல்ஹாபில் பைஜி ஆலிம் ஏ.கே.ஏ.ஷா்புதீன் பரிசுகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com