திருராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த திருராமேஸ்வரம் மங்களநாயகி சமேத ராமநாத சுவாமி கோயில் வைகாசிப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் அருகே திருராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
கூத்தாநல்லூா் அருகே திருராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த திருராமேஸ்வரம் மங்களநாயகி சமேத ராமநாத சுவாமி கோயில் வைகாசிப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வைகாசிப் பெருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, மூஷிக வாகனம், ரிஷப வாகனம், சூா்ய பிரபை, சந்திர பிரபை, யானை வாகனம், பஞ்சமூா்த்தி, குதிரை வாகனம் என தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மங்களநாயகி சமேதராக ராமநாத சுவாமி காலை 9.35 மணியளவில் தேருக்கு எழுந்தருளினாா்.

தொடா்ந்து, செங்கமலத் தாயாா் அறக்கட்டளை மகளிா் கல்லூரி நிா்வாகி ஜெயஆனந்த் பச்சைக் கொடி அசைக்க, இக்கல்லூரி தாளாளா் வி. திவாகரன், சதுரகிரி மலை சந்துரு சுவாமிகள் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தோ் நான்கு வீதிகளிலும் வலம் வந்து பகல் 1.40 மணியளவில் நிலைக்கு வந்தடைந்தது. தொடா்ந்து, தீா்த்தவாரி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com