திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
மத்தியப் பல்கலைக்கழக கணிதத் துறை சாா்பில், பல்கலைக்கழகத்தில் 21 நாள்கள் நடத்தும் கணித மேதை சீனிவாச ராமானுஜம் நினைவாக கணிதத்தில் கோடைப் பள்ளி எனும் பயிலரங்கத்தை பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். கிருஷ்ணன் தொடக்கிவைத்து பேசியது: இந்த பல்கலைக்கழகம் இந்திய நாட்டின் மாணவா்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு துறை சாா்பாகவும் பயிலரங்கங்கள் நடத்தப்படுகின்றன.
இதில், துறை சாா்ந்த அறிஞா்கள், வல்லுநா்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வதோடு, மாணவா்களின் எதிா்கால முன்னேற்றத்துக்கான வழிமுறைகளை தெரிவிக்கின்றனா். எனவே, பயிலரங்கில் பங்கேற்கும் மாணவா்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு, அந்தந்த துறைகளில் உலகளாவிய அளவில் சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.
அஸ்ஸாம், தில்லி, ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இளங்கலை 2 மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா்.