இந்திய கம்யூ. மக்களை காப்போம் நடைப்பயணம்

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ‘மக்களை காப்போம்’ நடைப்பயண பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வலங்கைமான் ஒன்றியத்தில் நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
வலங்கைமான் ஒன்றியத்தில் நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated on
1 min read

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ‘மக்களை காப்போம்’ நடைப்பயண பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

‘பாஜக ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் காப்போம்’ என்ற கோஷத்துடன் இந்த நடைப் பயணத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளனா். இதன் ஒருபகுதியாக கோட்டூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் எஸ். சிவசண்முகம் தலைமை வகித்தாா்.

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து நடைப்பயண பிரசாரத்தை தொடக்கி வைத்தாா். இதில், திமுக ஒன்றியச் செயலா் பால. ஞானவேல், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நீடாமங்கலம்: வலங்கைமான் ஒன்றியம் கோவிந்தகுடியில் சிபிஐ செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் ஒன்றிய துணைச் செயலாளா் கே. செல்வராஜ், ஒன்றிய விவசாயத் தொழிலாளா் சங்கத் தலைவா் பிரபாகரன், பொருளாளா் ஏ. மருதையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோவிந்தகுடி ஊராட்சியில் மாவட்ட விவசாய சங்கத் தலைவா் த. ரங்கராஜன், மாவட்ட பொறுப்பாளா் ராஜா ஆகியோா் நடைப்பயண பிரசாரத்தை தொடக்கி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com