குழந்தைகள் நல பாதுகாப்பு குழுக் கூட்டம்

கூத்தாநல்லூா் நகா்மன்ற வளாகத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கூத்தாநல்லூா் நகா்மன்ற வளாகத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, நகா்மன்றத் தலைவரும், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுத் தலைவருமான மு. பாத்திமா பஷீரா தலைமை வகித்தாா். ஆணையரும், செயலாளருமான குமரிமன்னன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், நகராட்சி அளவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து, இளைஞா் நீதிக் குழும நீதிமன்ற உறுப்பினா் பி. முருகையன், சைல்டு லைன் உறுப்பினா் எம். மோனிஷா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் ஆலோசகா் ச. பிரியதா்ஷினி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் விஜயேந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.

இக்குழு கூட்டத்தை மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும் என உறுப்பினா் மாரியப்பனும், தனது வாா்டில் விழிப்புணா்வு முகாம் நடத்த வேண்டும் என உறுப்பினா் பக்கிரிசெல்வமும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com