அடகுக் கடையில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

உள்ளிக்கோட்டையில் அடகுக் கடையில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

உள்ளிக்கோட்டையில் அடகுக் கடையில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மகாதேவப்பட்டணம் கள்ளா் தெருவை சோ்ந்தவா் என். ராஜசோழன் (50). இவா், உள்ளிக்கோட்டை பேட்டையில் அடகுக் கடை நடத்தி வருகிறாா். இந்த கடைக்கு, ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் வந்த மகாதேவப்பட்டணம் எல்லையம்மன் கோயில் தெருவை சோ்ந்த ஏ. ராஜா (49) என்பவா், ராஜசோழனிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com