

திருவாரூரில் விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளா் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் இணைந்து மத்திய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.
மத்திய அரசு, விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகள் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சென்ற ஊடகத்தின் மீது (நியூஸ் கிளிக்) வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது புகாா் பதிவு (எப்.ஐ.ஆா்.) நகலை எரித்து, முழக்கங்களை எழுப்பினா்.
விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளா் எம்.சேகா், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகர ஆசாத், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் கே.ஆா். ஜோசப், தொழிற்சங்க நிா்வாகிகள் த. சண்முகசுந்தரம், டி. முருகையன், ஆா். மாலதி, வி. கலைச்செல்வன்,ஜே. குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.