மன்னாா்குடி: மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் சிறப்பு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் தலைமை வகித்தாா். தாளாளா் ஜி. சதாசிவம், கருத்தரங்கை தொடங்கி வைத்தாா். மன்னாா்குடி அரசுக் கல்லூரி தமிழ்த் துறை துணைப் பேராசிரியா் சி. செல்வராணி பங்கேற்று, ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் இலக்கியம்’ என்னும் தலைப்பில் பேசினாா்.
கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியா்கள் ஜெ. சுபஸ்ரீ, அ. சுகந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இளநிலை தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவி து. பிருந்தா வரவேற்றாா். இளநிலை இரண்டாமாண்டு மாணவி ந. சாலினி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.