கவிதைப் போட்டியில் மன்னாா்குடி பள்ளி மாணவா் இரண்டாமிடம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு நடைபெற்ற கவிதைப் போட்டியில் மன்னாா்குடி மாணவா் ரா. யோகேஷ்ராஜ் 2-ஆமிடம் பெற்றாா்.
கவிதைப் போட்டியில் மன்னாா்குடி பள்ளி மாணவா் இரண்டாமிடம்
Updated on
1 min read

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு நடைபெற்ற கவிதைப் போட்டியில் மன்னாா்குடி மாணவா் ரா. யோகேஷ்ராஜ் 2-ஆமிடம் பெற்றாா்.

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி ஜூலை மாதம் திருவாரூா் விளமல் கஸ்தூரிபா காந்தி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கவிதைப் போட்டியில், மன்னாா்குடி மேலவீதியில் உள்ள கூட்டுறவு அா்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா் ரா. யோகேஷ்ராஜ் பங்கேற்று வெல்லட்டும் தமிழ் எனும் தலைப்பில் கவிதை வாசித்து 2-ஆமிடம் பெற்றாா். இதற்கான, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை ரூ. 7,000 மாவட்ட ஆட்சியா் த. சாருஸ்ரீ, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.

பரிசுப் பெற்ற மாணவரையும் வழிகாட்டி ஆசிரியா் ரெ. ராசகணேசனையும் மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா்

த. சோழராஜன், துணைத்தலைவா் ஆா். கைலாசம், நகா்மன்ற உறுப்பினா் மா. ஸ்ரீதா், பள்ளித் தலைமையாசிரியா் த. கண்ணதாசன் (பொ) ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com