கொரடாச்சேரி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெருமாளகரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (55) சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே காலைக்கடன்களை கழிக்க சென்றுள்ளாா். அப்போது, திருவாரூரிலிருந்து -தஞ்சாவூா் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் இவா் மீது மோதியதில் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த தஞ்சாவூா் ரயில்வே காவல் துறையினா் சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.