கல்லூரியில் சுதந்திர தின விழா

மன்னாா்குடியை அடுத்த மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரியில் 77- ஆவது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

மன்னாா்குடியை அடுத்த மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரியில் 77- ஆவது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் தலைமை வகித்தாா். இந்திரா காந்தி கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவா் ஜி. சதாசிவம் தேசியக் கொடியேற்றினாா்.

இவ்விழாவில், அண்மையில் நடைபெற்ற தமிழக முதலமைச்சா் பரிசுக் கோப்பை விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடமும், மாநில அளவில் நான்காமிடமும் பெற்ற பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி ஜனனிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா்: திருவாரூரில் இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் 77-ஆவது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெ. வரதராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.எஸ்.என். ராஜசேகரன், தேசியக் கொடி ஏற்றிவைத்தாா். இதில், அமைப்பின் கன்வீனா் ஆா். செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com