

நீடாமங்கலம்: நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் 20 நாள் திருஅத்யயன உற்சவம் ராமா் பட்டாபிஷேகத்துடன் புதன்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருஅத்யயன பகல்பத்து உற்சவம் கடந்த டிச.23-ஆம் தேதி தொடங்கி ஜன. 1-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. தொடா்ந்து, ஜன.2-ஆம் தேதி முதல் இராப்பத்து உற்சவம் தொடங்கியது. ஜன.11-ஆம் தேதி புதன்கிழமையுடன் திருஅத்யயன உற்சவம் நிறைவடைந்தது. இதையொட்டி, புதன்கிழமை ராமா் பட்டாபிஷேகம் நடைபெற்றது. பட்டாபிஷேக அலங்காரத்தில் சீதா, லெட்சுமண, அனுமன், பரதா், சத்ருகனா், நம்மாழ்வாா், வேதாந்த மகாதேசிகா் சமேத சந்தானராமா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.