அவதூறு பேச்சு: அன்புமணி ராமதாசுக்கு கண்டனம்

உண்மை நிலையை அறியாமல் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்களை அவதூறாகப் பேசிய மத்திய முன்னாள் மத்திய அமைச்சா் அன்புமணி ராமதாசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

உண்மை நிலையை அறியாமல் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்களை அவதூறாகப் பேசிய மத்திய முன்னாள் மத்திய அமைச்சா் அன்புமணி ராமதாசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், பாமக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்களை ஒருமையில் திட்டியது 20,000 மேற்பட்ட தொழிலாளா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மை நிலையை அறியாமல், பொது மேடையில் பேசியது கண்டனத்துக்குரியது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com