காவல் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள், கைது செய்ய வேண்டிய நபா்கள், பிடிக்கட்டளையை நிறைவேற்றுதல், வாகனத் தணிக்கை, வாகன விபத்துக்களை குறைத்தல், இரவு ரோந்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன், அதுகுறித்த அறிவுரைகளை அனைத்து உட்கோட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் ஆய்வாளா்களுக்கு அவா் வழங்கினாா்.

தொடா்ந்து, காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று, மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. ஈஸ்வரன் (தலைமையிடம்), கே. வெள்ளதுரை (சைபா் கிரைம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com