குடும்பத் தகராறு: மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே குடும்பத் தகராறில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே குடும்பத் தகராறில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தாா்.

குடவாசல் ஒன்றியம், சீதக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேலராமன் சேத்தியில் வசித்து வந்தவா் சுரேஷ் (45). இவருடைய மகன் டேவிட் (18). சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வியாழக்கிழமை இரவு தந்தைக்கும், மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மகன் டேவிட், தந்தை சுரேஷை அடித்து கீழே தள்ளினாராம். வெள்ளிக்கிழமை காலை பாா்த்தபோது, சுரேஷ் இறந்து கிடந்தது தெரியவந்தது.

குடவாசல் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், டேவிட்டை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com