மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள், குறிப்பேடுகள்

கோடை விடுமுறைக்கு பின்னா் 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள், குறிப்பேடுகள்
Updated on
1 min read

கோடை விடுமுறைக்கு பின்னா் 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

இதையடுத்து, ஒன்றியத்தில் உள்ள 67 தொடக்கப்பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 4,673 மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள், குறிப்பேடுகள், எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பள்ளிக்கு வந்த மாணவா்களை, தலைமை ஆசிரியா், உதவி ஆசிரியா்கள் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனா். மாணவா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ந. சம்பத் பாடநூல், குறிப்பேடுகளை வழங்கினாா்.

நிகழ்வில் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) சத்தியா, பள்ளி தலைமை ஆசிரியை உமா மற்றும் உதவி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

அதேபோல வட்டாரக் கல்வி அலுவலா் சு. முத்தமிழன் காளாஞ்சிமேடு, வடக்கு தெற்கு சோத்திரியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு இனிப்பு, பாடநூல்கள், குறிப்பேடுகளை வழங்கினாா்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் உதவி ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com