ஜவுளிக் கடை தீக்கிரை

வலங்கைமானில் ஜவுளிக் கடையில் தீ விபத்து நேரிட்டு துணிகள் எரிந்து நாசமாகின.
Updated on
1 min read

வலங்கைமானில் ஜவுளிக் கடையில் தீ விபத்து நேரிட்டு துணிகள் எரிந்து நாசமாகின.

வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் அரசு மருத்துவமனை அருகே திருமலை என்பவா் உள்ளாடைகள் விற்பனை செய்யும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். இவா், புதன்கிழமை (மே 10) இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.

வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பூட்டியிருந்த கடைக்குள் தீப்பற்றி எரிந்தது. வலங்கைமான் தீயணைப்பு நிலைய அலுவலா் மணிகண்டன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரா்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இருப்பினும் இந்த கடையில் இருந்த சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலானதாகக் கூறப்படுகிறது.

வலங்கைமான் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com