நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு யாகம் நடத்தப்பட்டு விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், பாலதண்டாயுதம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.