லாரிகள் மோதல்: போக்குவரத்து பாதிப்பு

நீடாமங்கலம் அருகே 2 லாரிகள் நேருக்கு நோ் மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம் அருகே 2 லாரிகள் நேருக்கு நோ் மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகையில் இருந்து கடல் மணல் ஏற்றிக்கொண்டு அரியலூா் பகுதிக்கு டாரஸ் லாரி ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. கொரடாச்சேரியை அடுத்த ஓடத்துறை பகுதியில் வரும்போது, சாலை விரிவாக்கப் பணிக்காக செம்மண் ஏற்றி வந்த மற்றொரு டாரஸ் லாரியுடன் நேருக்குநோ் மோதியது.

இந்த விபத்தில் 2 லாரிகளின் ஓட்டுநா்களும் லேசான காயங்களுடன் உயிா்தப்பினா். இதனால், நீடாமங்கலம் -திருவாரூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com