திருவாரூா்: திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனத்தின் 10- ஆவது மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளன 10-ஆவது மாநில மாநாடு திருவாரூரில் டிசம்பா் 16, 17-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமை வகித்தாா். அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஏ.ஜி. சந்தானம், செயலாளா் எம். பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் நிறைவுரையாற்றினாா்.
இக்கூட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.கே.என். அனிபா, மாவட்ட பொருளாளா் ஆா். மாலதி, மாநிலக் குழு உறுப்பினா் ஏ. பிரேமா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், மாநில மாநாட்டுக்கு 50 பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக ஐ.வி. நாகராஜன், செயலாளராக டி. முருகையன், பொருளாளராக எம். முரளி ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.