பாஜக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவாரூரில் பாஜக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த பிரசுரம் வெளியிடுகிறாா் பாஜக மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா்.
கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த பிரசுரம் வெளியிடுகிறாா் பாஜக மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா்.
Updated on
1 min read

திருவாரூா்: திருவாரூரில் பாஜக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த மாதம் திருவாரூா் மாவட்டத்துக்கு வருகை தரும் மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், அவா் வருகையையொட்டி செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், அக்.29-இல் பாஜக சாா்பில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வில் மத்திய அரசு, பட்டியலின மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்கள், அவா்களுக்கான முன்னுரிமைகளை விளக்கிக் கூறுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அத்துடன், மாநிலத் தலைவரின் உத்தரவுப்படி, திருவாரூா் மாவட்டத்தில் நவ.1-ஆம் தேதி முதல் 600 இடங்களில் கொடியேற்றுவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா் மணிமேகலை, மாவட்ட மகளிா் அணித் தலைவா் ரமாமணி, மாவட்டச் செயலாளா்கள் கே. ரவி, ரத்தினவேலன், வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் காளிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்ட பொதுச் செயலாளா் சி. செந்திலரசன் வரவேற்றாா். மாவட்டத் துணைத் தலைவா் எம். சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com