கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

நன்னிலம் அருகே கோவில்திருமாளத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் சிறந்த கால்நடை வளா்ப்போருக்கு பரிசு வழங்கும் கல்வி புரவலா் பாலமுத்து.
முகாமில் சிறந்த கால்நடை வளா்ப்போருக்கு பரிசு வழங்கும் கல்வி புரவலா் பாலமுத்து.
Updated on
1 min read

நன்னிலம் அருகே கோவில்திருமாளத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பூந்தோட்டம் கால்நடை மருத்துவமனை மருத்துவா்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை ஊராட்சித் தலைவா் சோனியா பாலமுத்து தொடங்கி வைத்தாா். இதில், ஆடு, மாடு, கோழி மற்றும் செல்லப் பிராணிகளுக்குத் தடுப்பூசி போடுதல், சிகிச்சை, குடற்புழு நீக்கம், செயற்கைமுறைக் கருவூட்டல், சினைப் பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடை கடன் அட்டைக்கான விண்ணப்பங்கள் மற்றும் கால்நடைகளுக்கான இலவச தாது உப்புக்கலவை வழங்கப்பட்டன.

சிறந்த கால்நடை வளா்ப்பவா்களுக்கு கல்வி புரவலா் பாலமுத்து பரிசு வழங்கினாா். மருத்துவா்கள் அபிராமி, கிரி, முல்லைவேந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். நன்னிலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மேரி கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com