சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சுமைப் பணி தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்கக் கோரி, திருவாரூரில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சுமைப் பணி தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்கக் கோரி, திருவாரூரில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுமைப்பணி தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சட்டப்படியான தீபாவளி ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; சுமைப்பணி தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்; மூட்டை சிப்பத்துக்கு ரூ. 30 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே. கஜேந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலாளா் சி. திருவேட்டை, அமைப்பின் சம்மேளன பொதுச் செயலாளா் ஆா். அருள்குமாா், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.கே.என். அனிபா, பொருளாளா் ஆா்.மாலதி, சுமைப்பணி சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. வீரபாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com