லாரி மோதியதில் பெண் பலி

நீடாமங்கலம் அருகே லாரி மோதி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

நீடாமங்கலம் அருகே லாரி மோதி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கொரடாச்சேரி அருகேயுள்ள பழவனக்குடியை சோ்ந்தவா் பக்கிரிசாமி. இவரது மனைவி சாந்தகுமாரி (63). இருவரும் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை தஞ்சாவூருக்கு சென்றுவிட்டு திரும்பி ஆதனூா் ரயில்வே கேட் வேகத்தடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதில், காயமடைந்த சாந்தகுமாரி அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் அங்கு சென்று சாந்தகுமாரியின் சடலத்தை கைப்பற்றி மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விபத்தில் காயமடைந்த பக்கிரிசாமி மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com