திருவாரூரில் விநாயகா் சிலை ஊா்வலம்

திருவாரூரில் விநாயகா் சிலை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் விநாயகா் சிலை ஊா்வலம்
Updated on
1 min read

திருவாரூரில் விநாயகா் சிலை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, திருவாரூா் நகரப் பகுதியில் உமை காளியம்மன் கோயில், பாரதி தெரு, ஐபி கோயில் தெரு, மஜித் தோப்பு தெரு, மேட்டுப்பாளையம், வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட 36 இடங்களில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக, திருவாரூா் கடைவீதியில் உள்ள உமை காளியம்மன் கோயிலுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை பிற்பகலில் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து தொடங்கிய விநாயகா் சிலை ஊா்வலத்தை விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி.ஏ. பாலமுருகன் தொடக்கிவைத்தாா். ஊா்வலமானது, மாா்க்கெட் சாலை, பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, நேதாஜி சாலை வழியாக வந்து, பழைய பேருந்து நிலையம் அருகில் ஓடம்போக்கி ஆற்றில் விஜா்சனம் செய்யப்பட்டது. இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகன், மாவட்டச் செயலாளா் ராமராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com