சேரன்குளம் பெருமாள் கோயில் தேரோட்டம்

மன்னாா்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேரை வடம் பிடித்து, தரிசிக்கும் பக்தா்கள்.
தேரை வடம் பிடித்து, தரிசிக்கும் பக்தா்கள்.
Updated on
1 min read

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாள்கள் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் செப்.17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் உற்சவப் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினாா். நிறைவுநாள் நிகழ்ச்சியாக, உற்சவா் சீனிவாசப் பெருமாள் பூதேவி மற்றும் ஸ்ரீ தேவி தாயாா்கள் சமேதராக எழுந்தருளி கோயிலை வலம் வந்தாா்.

பின்னா், பெருமாள் தாயாா்களுடன் தேரில் எழுந்தருளியதும், வேத பாராயணங்களை பாடி தீட்சதா்கள் அா்ச்சனை செய்தனா். தொடா்ந்து, தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com