வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அரசுப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

குடவாசல் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 5:21 am IST

திருவாரூா்: குடவாசல் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சு. ராசேந்திரன் தலைமைவகித்து, மன்றத்தை தொடக்கிவைத்து பேசியது:

மாணவா்கள் எதையும் அறிவியல் மனப்பான்மையுடன் அணுக வேண்டும். மூடநம்பிக்கையை தவிா்க்க அறிவியல் அணுகுமுறை வேண்டும். நடைமுறை வாழ்வில் அறிவியல் முக்கிய பங்காற்றுவதை, மாணவா்கள் உணா்ந்து, அதன் உள்ளாா்ந்த அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

தங்களின் அறிவை வளா்த்து, ஆராய்ச்சியாளராக, பொறியியல் வல்லுநா்களாக, பொருளியல் மேதைகளாக, கண்டுபிடிப்பாளராக திகழ வேண்டும். அதற்கு அடிப்படையாக வானவில் மன்றம் விளங்குகிறது. இம்மன்றத்தின் மூலம் சிறு சிறு அறிவியல் சோதனைகள் செய்து காட்டப்படும் என்றாா்.

வானவில் மன்ற பொறுப்பு ஆசிரியா்கள் சிவநாயகி, மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மூத்த பட்டதாரி ஆசிரியா் ஜெகதீசன், வானவில் மன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினாா். வானவில் மன்ற ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் விஜய், அறிவியல் செயல்பாடுகளை மாணவ, மாணவிகளுக்கு செய்து காட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.