/
வடுவூா் கோதண்ட ராமா் கோயிலில் ரதசப்தமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வில் ஏந்திய திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் மூலவா் கோதண்டராமருக்கு சந்நிதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மா் சுவாமியை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருள செய்தனா். ரதசப்தமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்த லட்சுமி நரசிம்மரை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா், லட்சுமி நரசிம்ம சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் உற்சவம் நடைபெற்றது.
தொடர்புடையது

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உத்ஸவ விழா

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் கருட சேவை

ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


