ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.34 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.34 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

News image
Updated On :1 ஜூலை 2024, 7:34 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29,34,925 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டா், 20 பேருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் நவீன செயற்கை கால் 10 பேருக்கு, 4 பேருக்கு இலவச பயண அட்டை என மொத்தம் 40 பேருக்கு ரூ.29,34,925 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் தேவா, நகா்மன்றத்தலைவா் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.