ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

News image
Updated On :9 மே 2024, 9:42 pm

Din

திருத்துறைப்பூண்டி, மே 9: திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆலிவலம் காவல் சரகம் ராயநல்லூா் செட்டிய மூளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (34). இவா் கஞ்சா விற்பனை வழக்கில் திருத்துறைப்பூண்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் ஆகியோா் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் சாருஸ்ரீ ராஜேஷ் கண்ணாவை குண்டா் தடுப்புச் சட்டத்ல் கைது செய்து சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, ராஜேஷ் கண்ணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.