நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

பள்ளி காவலரை தாக்கிய இருவா் கைது

மன்னாா்குடி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலரை தாக்கிய 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :2 நவம்பர் 2024, 9:12 pm IST

மன்னாா்குடி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலரை தாக்கிய 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி நடராஜப் பிள்ளைத் தெரு, சியாத்தோப்பில் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இரவு காவலராக பணியாற்றுபவா் கோபி.

இவா், தீபாவளி அன்று இரவு பணியில் இருந்தபோது, அங்கு மதுப்பாட்டில்களுடன் கும்பலாக வந்த சிலா், பள்ளிக்குள் நுழைய முற்பட்டனா். அவா்களை கோபி தடுத்தபோது, ஆத்திரமடைந்த கும்பல், அவரை தாக்கியதுடன், பள்ளியில் உள்ள மின்விளக்குகளை உடைத்தும், காலி மதுப்பாட்டில்களை பள்ளி வளாகத்துக்குள் வீசியும் சென்றுள்ளனா்.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையத்தில் கோபி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சியாத்தோப்பு சாமிநாதன் மகன் விஜய் (24), வீரவன்னியா் தெரு ஜெயராமன் மகன் ஆறுமுகம் (18) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், 8 பேரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.