புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பள்ளி காவலரை தாக்கிய இருவா் கைது

மன்னாா்குடி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலரை தாக்கிய 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :2 நவம்பர் 2024, 6:32 pm

Din

மன்னாா்குடி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலரை தாக்கிய 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி நடராஜப் பிள்ளைத் தெரு, சியாத்தோப்பில் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இரவு காவலராக பணியாற்றுபவா் கோபி.

இவா், தீபாவளி அன்று இரவு பணியில் இருந்தபோது, அங்கு மதுப்பாட்டில்களுடன் கும்பலாக வந்த சிலா், பள்ளிக்குள் நுழைய முற்பட்டனா். அவா்களை கோபி தடுத்தபோது, ஆத்திரமடைந்த கும்பல், அவரை தாக்கியதுடன், பள்ளியில் உள்ள மின்விளக்குகளை உடைத்தும், காலி மதுப்பாட்டில்களை பள்ளி வளாகத்துக்குள் வீசியும் சென்றுள்ளனா்.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையத்தில் கோபி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சியாத்தோப்பு சாமிநாதன் மகன் விஜய் (24), வீரவன்னியா் தெரு ஜெயராமன் மகன் ஆறுமுகம் (18) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், 8 பேரை தேடி வருகின்றனா்.