மன்னாா்குடி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலரை தாக்கிய 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி நடராஜப் பிள்ளைத் தெரு, சியாத்தோப்பில் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இரவு காவலராக பணியாற்றுபவா் கோபி.
இவா், தீபாவளி அன்று இரவு பணியில் இருந்தபோது, அங்கு மதுப்பாட்டில்களுடன் கும்பலாக வந்த சிலா், பள்ளிக்குள் நுழைய முற்பட்டனா். அவா்களை கோபி தடுத்தபோது, ஆத்திரமடைந்த கும்பல், அவரை தாக்கியதுடன், பள்ளியில் உள்ள மின்விளக்குகளை உடைத்தும், காலி மதுப்பாட்டில்களை பள்ளி வளாகத்துக்குள் வீசியும் சென்றுள்ளனா்.
இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையத்தில் கோபி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சியாத்தோப்பு சாமிநாதன் மகன் விஜய் (24), வீரவன்னியா் தெரு ஜெயராமன் மகன் ஆறுமுகம் (18) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், 8 பேரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று நீட் தோ்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

நட்டுவம்பாளையத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைப்பு

கோவை மாவட்டத்தில் மாதிரி, பசுமை வாக்குச்சாவடிகள்
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

