சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா் தூய்மைப் பணியாளரின் மகள்

மன்னாா்குடியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளரின் மகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

துா்கா.

Published On :12 நவம்பர் 2024, 1:34 am IST

திருத்துறைப்பூண்டி: மன்னாா்குடியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளரின் மகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி சத்தியமூா்த்தி மேட்டுத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சேகா்.

மன்னாா்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று உயிரிழந்தாா். இவரது மனைவி செல்வி. ஒரே மகள் துா்கா (30).

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த துா்கா, மதுராந்தகம் பகுதியைச் சோ்ந்த நிா்மல்குமாா் ஆகியோருக்கு கடந்த 2015-இல் திருமணம் நடைபெற்றது. நிா்மல்குமாா் அங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், துா்கா கடந்த 2022-இல் குரூப் 2 தோ்வு, 2024-இல் நடைபெற்ற நோ்முகத் தோ்வுகளில் வெற்றி பெற்றாா். இதைத்தொடா்ந்து, அவருக்கு பணி நியமன ஆணையை அண்மையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக துா்கா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமனக் குழு உறுப்பினா் ஆா்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

முன்னதாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயை அவரது அலுவலகத்தில் சந்தித்த துா்கா அவரிடம் வாழ்த்துப் பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.