ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிபிஎம் மாவட்ட மாநாடு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம்

Updated On :23 அக்டோபர் 2024, 7:32 pm

பேரளத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், திருவாரூா் மாவட்ட மாநாட்டுக்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் ஒன்றியச் செயலாளா் தியாகு.ரஜினிகாந்த் தலைமை வகித்தாா். திருவாரூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு கொல்லுமாங்குடியில் டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டின் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கலந்துகொண்டு, மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினாா்.

தொடா்ந்து, வரவேற்புக் குழு தலைவராக மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ. முகமது உதுமான், செயலாளராக தியாகு ரஜினிகாந்த், பொருளாளராக எம். ராமமூா்த்தி உள்ளிட்ட 100 போ் அடங்கிய வரவேற்புக் குழு தோ்வு செய்யப்பட்டது.

மாநாட்டில் தொண்டா்கள் அணிவகுப்புடன் பேரணி, பொதுக்கூட்டம் அனைத்து அம்சங்களும் சிறப்பாக நடத்திட கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமையில் திட்டமிடப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டக் குழு உறுப்பினா் கே. எம் .லிங்கம் நன்றி கூறினாா்.