பேரளத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், திருவாரூா் மாவட்ட மாநாட்டுக்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் ஒன்றியச் செயலாளா் தியாகு.ரஜினிகாந்த் தலைமை வகித்தாா். திருவாரூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு கொல்லுமாங்குடியில் டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டின் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கலந்துகொண்டு, மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினாா்.
தொடா்ந்து, வரவேற்புக் குழு தலைவராக மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ. முகமது உதுமான், செயலாளராக தியாகு ரஜினிகாந்த், பொருளாளராக எம். ராமமூா்த்தி உள்ளிட்ட 100 போ் அடங்கிய வரவேற்புக் குழு தோ்வு செய்யப்பட்டது.
மாநாட்டில் தொண்டா்கள் அணிவகுப்புடன் பேரணி, பொதுக்கூட்டம் அனைத்து அம்சங்களும் சிறப்பாக நடத்திட கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமையில் திட்டமிடப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டக் குழு உறுப்பினா் கே. எம் .லிங்கம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

பழனிக்கு எத்தனை முறை பாஜக காவடி எடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது! - எம்.ஏ. பேபி

பாஜகவின் சிலந்தி வலையில் சிக்கியுள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி: இந்திய கம்யூ. முன்னாள் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்

ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

